கையில் ஏழு படங்களோடு ஒரு பக்கம் பரபரப்பாக இருக்கிறார் ஜெய். அதே ஏழு படங்களோடு இருந்தாலும் பரபரப்பே இல்லாமல் இருக்கிறார் ஸ்ரீகாந்த். வேடிக்கை என்னவென்றால் அவரைப் போலவே இவரும் ஒரு கோடி சம்பளம் கேட்கிறாராம்.
இதற்கிடையில், ஸ்ரீகாந்தும், பூமிகாவும் சேர்ந்து நடிக்கும் மா படத்தின் படப்பிடிப்பு அப்படியே நிற்கிறது. காரணம், இப்படம் எனக்கே சொந்தம் என்று தயாரிப்பாளர் சங்கத்திற்குப் போன பிரகாஷ்ராஜ், மீண்டும் அப்படத்தின் கடிவாளத்தை தளர்த்துவதற்குள் ஸ்ரீகாந்த், பூமிகா இருவரின் கால்ஷீட்டும் வீணாகிவிட்டதாம். ஆளுக்கொரு திசையில் வேறு படங்களில் பிசியாகிவிட, இந்த இருவரின் தேதிக்காகக் காத்திருக்கிறது மா.
|