சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒரு பிரஸ் மீட் வைத்தது. நடிகை சினேகா டாக் ஷோ மாதிரியான நிகழ்ச்சி ஒன்றை தொகுத்தளிப்பார் என்று பிரஸ் ரிலீசில் குறிப்பிட்டிருந்தார்கள். இன்னும் கொஞ்சம் அதிகப்படியாகப் போய், ஆளுயர சினேகாவின் படத்தையும் மேடையில் வைத்திருந்தார்கள்.
அதற்குள் சின்னத்திரைக்கு வர வேண்டிய அவசியம் என்ன என்று குழம்பிய நிருபர்களில் சிலர் அங்கிருந்தபடியே சினேகாவுக்கு போன் செய்து கேள்விகளைத் தொடுக்க, அதிர்ந்துபோனார் புன்னகை இளவரசி. ஐயய்யோ, நான் எந்த தொலைக்காட்சிக்கும் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தித் தருவதாக வாக்குறுதி கொடுக்கவில்லையே, பின்பு எப்படி என் பெயரையும் படத்தையும் பயன்படுத்தினார்கள் என்று கோபத்தில் கொதித்தார் சினேகா. கையோடு கையாக எல்லாப் பத்திரிகையாளர்களுக்கும் நான் எந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை என்று விளக்கமளித்து ஒரு எஸ்.எம்.எஸ்.ஸும் அனுப்பி வைத்தார்.
சினேகாவின் விளக்கம் குறித்து டி.வி. நிர்வாகத்திடம் கேட்டால், அவங்களைக் கேட்கலாம்னு இருந்தோம். இன்னும் கேட்கவில்லை என்றார்கள். அது சரி!
|