அவர் விலகிப் போனாலும் வதந்திகளும், வம்புகளும் விடாமல் துரத்துகின்றன சிம்புவை. சில தினங்களுக்கு முன் ஸ்டார் ஓட்டல் ஒன்றிற்குத் தன் தம்பியுடன் விருந்துக்குப் போனவர், விருந்தை முடித்துவிட்டு வெளியே வந்து பார்த்தால், டிரைவரைக் காரோடு காணவில்லை.
பதறிப் போனவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாராம். அவர்களும் விடிய விடியத் தேடிவிட்டு, கார் சிம்பு வீட்டில் இருப்பதை அறிந்ததும் வெறுத்துப்போனார்களாம். சிம்புவின் அம்மா உஷாதான் காரோடு வீட்டுக்கு வரச் சொல்லிப் பணித்ததாக டிரைவர் கூறுகிறார்.
பிரச்சினை பத்திரிகைகளில் வெளிவந்து பரபரப்பானதால் விளக்கம் அளித்தார் அப்பா விஜய .டி. ராஜேந்தர். சம்பவ தினத்தன்று சிம்பு ஓட்டலுக்குப் போகவில்லை. போனது அவரது தம்பி குறளரசன்தான். சிம்பு வெளிநாட்டில் இருக்கிறார். கார் இன்னும் கிடைக்கவே இல்லை என்கிறார்.
சினிமாக்காரர்களுக்கு கற்பனை வளம் ஜாஸ்தி. அதிலும் அரசியல் கம் சினிமாக்காரராக இருந்தால்!