புதுதில்லி பிப்-23. கோலாலம்பூரில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்திய அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, ஐம்பது ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை தோற்கடித்து இந்த தகுதியை பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 265 ரன் எடுத்தது. அணியின் தலைவர் விராட் கோக்லி சதம் அடித்தார்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 47 புள்ளி ஐந்து ஓவர்களில் 215 ரன்னுக்கு சுருண்டது. நாளை நடைபெறவுள்ள கால் இறுதி லீக் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
|