தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper
Videos
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
(1) முருகவேல் (சென்னை)

கேள்வி : கிரிக்கெட்டுக்கும், அரசியலுக்கும் உள்ள வித்தியாசம்..?

பதில் : கிரிக்கெட்டில், விளையாட்டு வீரரின் மகனையும், மகளையும் அவ்வளவு எளிதில் களம் இறக்க முடியாது. அப்படியே செய்தாலும் நின்று ஆடினால்தான் நிலைத்து நிற்க முடியும். அரசியலில் அப்படியல்ல.....

(2) திருமதி சுதா பாலாஜி (சென்னை - திருவல்லிக்கேணி)

கேள்வி : கடவுள் இருக்கிறாரா...! இல்லையா...!...?

பதில் : கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்கள் சிலர், செய்வதைப் பார்த்தால், கடவுள் இல்லை என்று சொல்லத்தோன்றுகிறது. கடவுள் இல்லை என்று சொல்வோர் சிலர் செய்வதை பார்த்தால் கடவுள் இருக்கிறார் என்று சொல்லத்தோன்றுகிறது. இருக்கிறாரா.. இல்லையா என்பது, ஆண்டவனுக்கே வெளிச்சம்.

(3) தீபா (சென்னை)

கேள்வி : கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது என்றால் என்ன?

பதில் : பாமக-வின் 18 வாக்குகள் கிடைக்கவேண்டும் என்ற ஆசையில், அவர்கள் கலக்கும் குட்டையில் மீன் பிடிக்க முடியாதா என்று அதிமுக இயங்குகிறது.

(4) பத்ரிநாதன் (சென்னை)

கேள்வி : அரசனை நம்பி புருஷனை விட்ட கதை என்ன....?

பதில் : கர்நாடக முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில், மகராஷ்ட்ர ஆளுநர் பதவியை விட்டிருக்கிறாரே..எஸ் எம் கிருஷ்ணா...! அதுதான்.

(5) திருமதி வசந்தா (சென்னை - துரைப்பாக்கம்)

கேள்வி : பூனை கண்ணை மூடிக்கொண்டால் என்ற சொல்லுக்கு உதாரணம் உண்டா..?

பதில் : ஏன் இல்லை? ஒளரங்கசீப் கண்காட்சியை இழுத்து மூடிவிட்டால், வரலாற்றையே மூடி மறைத்துவிடலாம் என்று எண்ணுகிறார்களே அதுதான்.

குறிப்பு:
question@chennaionline.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் Published on 7th March, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 

Copyright © 2009, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy
Pay Per Click Ads by pay per click advertising by Kontera